சமீபத்திய இந்த செய்தியை பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். 30 சதவீதம் 40 சதவீதம் சில நாடுகள் 50 சதவீதம் விவாகரத்தால் அவதிப்படும் நாடுகளாக உள்ளது கவலை தரும் விஷயம். இதனால் மனதால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எதிர்காலம் என்ன ஆவது? ஒன்றுபட்ட கூட்டு குடும்பம் சிதைந்து மனிதர்களை நேசிக்கும் மனோபாவமும் குறைந்து விட்டது. நானும் சம்பாதிக்கிறேன்: நீயும் சம்பாதிக்கிறாய். உனக்கு நான் ஏன் கட்டுப்பட வேண்டும். உன் பேச்சை நான் எதற்கு கேட்க வேண்டும் என்ற ஈகோ தான் இன்று உலகின் பல குடும்பங்களை பிடித்து ஆட்டுகிறது.
-------------------------------------------
'இனி உன் பேரு மலர்விழி இல்லே! கூகுள்'
'என் பேரை எதுக்கு மாத்துரீங்க!'
'நான் எங்கே போனாலும் கண்டுபிடிச்சுடுரியே! அதான்.'
------------------------------------------
கணவன்:- என்னடி இது பெட்ஷீட் கனத்துல புடவை எடுத்து இருக்கே
மனைவி:- கட்டிக்க போறது நாந்தானே
கணவன்:- அதை துவைக்கிறது நான்தானே! எனக்குல்லே வலி தெரியும?
------------------------------------------
முதல் இடம் ரஷ்யா:
லெனினும் ஸ்டாலின் தங்களின் கனவு தேசமாக உருவாக்கிய ரஷ்யாதான் இன்று குடும்பங்களில் நடக்கும் விவாகரத்தில் உலகின் முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. 5.30 சதவீத மக்கள் ரஷ்யாவில் விவாகரத்துப் பெற்றுக் கொள்கின்றனர். மேற்கத்திய கலாசாரமும் நாத்திகமும் இதற்கான முக்கிய காரணங்களாக விளங்குகின்றன. ஊழலால் விளைந்த பொருளாதார தேக்க நிலையும் மக்களை தனியாக பிரிந்து செல்ல தூண்டுகிறது.
இரண்டாவது இடம் அருபா:
கரிபியன் பகுதியைச் சேர்ந்த அரூபா என்ற இந்த தீவு விவாகரத்தில் உலகின் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. 5.27 சதவீத மக்கள் இங்கு விவாகரத்தைப் பெற்றுக் கொள்கிறார்களாம். வறுமை இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
மூன்றாம் இடம் அமெரிக்கா:
நம்ம பெரியண்ணன் அமெரிக்கா விவாகரத்தில் மூன்றாவது இடத்தில் இருக்காக! :-) அண்ணாச்சி 4.19 சதவீதம் பெற்று சிறந்த இடத்தை பிடித்துள்ளார். இன்னும் சில ஆண்டுகளில் முதல் இடத்தை பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தனது மக்களுக்கு நிம்மதியான வாழ்வை தர லாயக்கற்ற அரசு உலகைக் கட்டுப்படுத்தப் போகிறதாம். மக்களின் மன நிம்மதியின்மையே விவாகரத்துக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
நான்காவது இடம் பனாமாவுக்கு:
நான்காவது இடத்தை பெற்றுள்ள பனாமா பெற்ற புள்ளி விபரம் 3.80. கிட்டத்தட்ட அமெரிக்காவை நெருங்கி வருகிறது. முன்பெல்லாம் இது போன்ற விவாகரத்துக்கெல்லாம் சர்ச் அனுமதி கொடுப்பதில்லை. கலாசார மாற்றங்களின் விளைவாக இன்று மிகப்பெறும் அச்சுறுத்தலாக விவாகரத்து இந்நாட்டை உலுக்கி எடுக்கிறது.
ஐந்தாவது இடம் உக்ரைனுக்கு:
ஐந்தாவது இடத்தில் உள்ள உக்ரைன் பெற்ற புள்ளி விபரங்கள் 3.79. ரஷ்யாவோடு ஒன்றாக இருந்த போது குடும்பங்களும் ஓரளவு ஒன்றாக இருந்தன. ரஷ்ய குடியரசிலிருந்து பிரிந்தவுடன் மேற்கத்திய கலாசாரம் இங்கும் குடும்பங்களை பிரித்து விட காரணமாகிறது. பல பெற்றோர்கள் குழந்தை பெறுவதையே தவிர்க்கின்றனர். அதற்கு காரணமாக நாட்டின் பொருளாதாரத்தைச் சுட்டிக் காட்டுகின்றனர். குழந்தை பிறக்காததும் விவாகரத்துக்கு முக்கிய காரணமாக அமைகிறது.
ஆறாவது இடத்தில் இருப்பது பெலாருஸ்:
ரஷ்ய குடியரசுக்கு உட்பட்ட பெலாருஸ் நாடு ஆறாவது இடத்தைப் பெற்றுள்ளது. பொருளாதார தேக்கமும் மேற்கத்திய கலாசாரம் இந்நாட்டில் புகுந்ததும் இதற்கு முக்கிய காரணமாகிறது.
ஏழாவது இடத்தில் இருப்பது மால்டோவா:
பொருளாதார தேக்க நிலையும் மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டதும் காரணமாக சொல்லப்படுகிறது.
எட்டாவது இடம் கியூபாவுக்கு:
கியூபாவில் நடக்கும் விவாகரத்தின் சதவீதம் 3.16 ஆக உள்ளது. இங்கு திருமணத்தை தங்களின் பொரளாதாரத்தை உயர்த்திக் கொள்ளும் ஒரு மார்க்கமாகப் பார்க்கின்றனர். பல மொழிகள் கலந்திருப்பதும் இது போன்ற விவாகரத்துகள் அதிகரிக்க காரணமாகின்றன.
ஒன்பதாவது இடம் செக்கோஸ்லோவாகியா:
விவாகரத்துகள் 3.11 சதவீதம் நடந்து உலகின் ஒன்பதாவது இடத்தைப் பெற்றுள்ளது.
பத்தாவது இடத்தில் இருப்பது தென் கொரியா:
சுனு என்ற தென் கொரியாவின் திருமண வரன் தேடும் ஏஜன்சியின் தலைவர் நியூயார்க் டைம்ஸூக்கு பேட்டி கொடுக்கும் போது சொன்னதாவது: 'இதற்கு முன்பு இவ்வாறான மோசமான நிலை ஏற்பட்டதில்லை. வருடா வருடம் விவாகரத்துகள் அதிகமாகிக் கொண்டே வருகின்றன. எங்களுக்கென்று தனி பாரம்பரிய பெருமை உண்டு. அதை நாங்கள் இழந்து வருகிறோம்' என்கிறார்.
நம் பாரத நாட்டிற்கென்று தனிப் பாரம்பரியம் பெருமை உண்டு. ஆனால் மேற்கத்திய மோகத்தால் அதனை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறோம். ஆங்கில மொழி மோகமும் ஆங்கில கலாசாரத்தை சுவீகரித்துக் கொள்வதிலும் மேற்கண்ட நாடுகளோடு போட்டி போடுகிறோம். நமது நாட்டிலும் விவாகரத்து தினம் தினம் அதிகரித்து வருவது கவலைக்குரிய விஷயம்.
இதில் மற்றொரு ஆச்சரியமான விஷயம் இஸ்லாமியர்கள் தலாக் தலாக் தலாக் என்று அநியாயத்துக்கு பெண்களை விவாகரத்து பண்ணி கொடுமைபடுத்துகிறார்கள் என்று கூறுவோர் உண்டு. அதிசயமாக இந்த பட்டியலில் ஒரு முஸ்லிம் நாடு கூட வராததை பார்த்து ஆச்சரியப்பட்டேன். விவாகரத்தை சிரமாக்கிய ஒரு சமூகம் சதவீதத்தில் அதிகமாக இருக்கிறது. விவாகரத்தை மிக இலகுவாக்கிய இஸ்லாமியர்களிடம் விவாகரத்து குறைந்துள்ளதை இந்த நேரத்தில் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
http://www.siliconindia.com/news/general/10-Countries-With-the-Highest-Divorce-Rates-nid-117138-cid-1.html
--------------------------------------------------------------------------
(இத்தகைய) தலாக் இரண்டு முறைகள் தாம் பின் (தவணைக்குள்)முறைப்படி கணவன், மனைவியாகச் சேர்ந்து வாழலாம் அல்லது நேர்மையான முறையில் பிரிந்து போக விட்டுவிடலாம் அவ்விருவரும் இறைவனின் வரம்புகளை நிலை நிறுத்த முடியாது என்று அஞ்சும் போது தவிர. நீங்கள் மனைவியருக்கு கொடுத்தவற்றிலிருந்து யாதொன்றையும் திருப்பி எடுத்துக் கொள்ளுதல் கூடாது - இன்னும் நீங்கள் இறைவனின் வரம்புகளை அவர்களால் நிலை நிறுத்த முடியாது என்று அஞ்சினால், அவள் (கணவனுக்கு) ஏதேனும் ஈடாகக் கொடுத்து(ப் பிரிந்து) விடுவதில் குற்றமில்லை. இவை இறைவன் ஏற்படுத்தியுள்ள வரையறைகளாகும். ஆகையால் அவற்றை மீறாதீர்கள். எவர் இறைவனின் வரையறைகளை மீறுகிறார்களோ, அவர்கள் அக்கிரமக்காரர்கள் ஆவார்கள்.
-குர்ஆன் (2:229)
மீட்ட முடியாதபடி (அதாவது இரண்டு தடவை தலாக் சொன்ன பின்னர் மூன்றாம்) தலாக் சொல்லிவிட்டால் கணவன் அப்பெண்ணை மறுமணம் செய்து கொள்ள முடியாது. ஆனால் அவள் வேறு ஒருவனை மணந்து அவனும் அவளை தலாக் சொன்னால் அதன் பின் (முதற்) கணவன் மனைவி சேர்ந்து வாழ நாடினால் - அதன் மூலம் இறைவனின் வரம்புகளை நிலைநிறுத்த முடியும் என்று எண்ணினால், அவர்கள் இருவரும் (மறுமணம் செய்து கொண்டு மணவாழ்வில்) மீள்வது குற்றமல்ல. இவை இறைவனின் வரையறைகளாகும்டி இவற்றை அல்லாஹ் புரிந்து கொள்ளக்கூடிய மக்களுக்குத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறான்.
-குர்ஆன்(2:230)
இன்னும், பெண்களை நீங்கள் தலாக் செய்து, அவர்களும் தங்களுடைய இத்தா தவணையைப் பூர்த்தி செய்து விட்டால், அவர்கள் தாங்கள் விரும்பி ஏற்கும் கணவர்களை முறைப்படித் திருமணம் செய்து கொள்வதைத் தடுக்காதீர்கள். உங்களில் யார் இறைவனின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளார்களோ, அவர்களுக்கு இதைக் கொண்டு உபதேசிக்கப்படுகிறது. இ(தன்படி நடப்ப)து உங்களுக்கு நற்பண்பும், தூய்மையும் ஆகும் (இதன் நலன்களை) இறைவன் அறிவான் நீங்கள் அறிய மாட்டீர்கள்.
-குர்ஆன்(2:232)
ஆம் முஸ்லிம்களிடம் விவாகரத்தின் சதவீதம் குறைவாக இருக்க காரணம் அவர்களிடம் உள்ள இறைபக்தி என்றால் மிகையாகாது. அநியாயமாக ஒரு பெண்ணை தலாக் சொன்னால் அதன் பலனை மறுமையில் தண்டனையாக பெறுவான்: அதே போல் மனைவியும் பெறுவாள் என்று பெரும்பாலான முஸ்லிம்கள் மறுமையை நம்புவதும் மேற்கத்திய கலாசாரத்துக்கு அடிமையாகாமல் இருப்பதும் கூட காரணமாக இருக்கலாம்.
- சுவனப்பிரியன்
'எந்த முஸ்லிமாவது ஒரு மரத்தை நட்டால் அல்லது எதையேனும் பயிரிட்டால் அதிலிருந்து மனிதனோ, பறவையோ,விலங்குகளோ சாப்பிட்டால் அது அவர் செய்த தர்மமாக கருதப்படும்.'-முகமது நபி. -அறிவிப்பவர்:நபித்தோழர் அனஸ். ஆதாரம்:சுனன் திர்மதி 1398
Saturday, May 26, 2012
Thursday, May 24, 2012
ஜனநாயகம் என்ற பெயரில் நடக்கும் கேலிக் கூத்து!
நமது நாட்டு ஜனநாயக முறையை நாம் எப்போதும் புகழ்ந்த வண்ணமே உள்ளோம். நமது அண்டை நாடுகளில் ராணுவ ஆட்சியும் சர்வாதிகார ஆட்சிகளும் நடந்து வரும் போது 100 கோடிக்கும் மேல் மக்கள் தொகையைக் கொண்ட நம் நாடு இன்று வரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வருவதை நானும் நீங்களும் பெருமிதத்தோடே சொல்லிக் கொள்கிறோம். ஆனால் நம்நாட்டு தற்போதய தேர்தல் முறை சரியானதுதானா! இதில் உள்ள குறைகளை எவ்வாறு நீக்குவது என்பதை அலசுவதே இந்தப் பதிவு.
வழமையாக நமது தேர்தலில் போட்டியிடும் சட்டமன்ற வேட்பாளர் ஒரு தொகுதியில் 100000 லட்சம் வாக்கு பெறுவதாக வைத்துக் கொள்வோம். இவரை எதிர்த்து போட்டியிட்ட எதிரணி வேட்பாளர் 99999 வாக்குகளே பெறுகிறார். நமது நாட்டு சட்டத்தின்படி 100000 வாக்குகள் பெற்றவர் வெற்றி பெற்று சட்டமன்றத்துக்கும் சென்று விடுகிறார். மற்றொரு வேட்பாளருக்கு 99999 வாக்குகளை கிடைத்ததால் அவர் தோல்வியுறுகிறார். 99999 பேர் போட்ட வாக்குகளுக்கு எந்த மதிப்பும் இல்லாமல் அவர்களின் எண்ணங்கள் சட்டமன்றத்தில் ஒலிக்காமலும் நீர்த்து விடுகிறது. இது ஜனநாயகமா? 99999 பேரின் எதிர் வாக்குகளைப் பெற்றவர் எவ்வாறு மக்கள் பிரதிநியாக சட்ட மன்றம் செல்ல முடியும்?
அதேபோல் ஒரு மாநிலத்தில் 100 தொகுதிகள் உள்ளதாக வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு தொகுதியிலும் ஆயிரம் வாக்காளர் என்றும் வைத்துக் கொள்வோம். இந்த அனைத்து தொகுதிகளிலும் அதிமுக 501 ஓட்டுகளும் திமுக 499 ஓட்டுகளும் பெறுவதாகக் கொள்வோம். இப்போது நூறு தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. திமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்றும் அறிவிக்கப்படுகிறது. இது நாம் பின்பற்றும் பிரிட்டனின் ஜனநாயக முறை. அதாவது அதிமுகவுக்கு 100 எம்எல்ஏக்கள் கிடைக்க திமுகவுக்கு ஒரு எம்எலஏ கூட கிடைக்கவில்லை. இரண்டு கட்சிகளும் பெற்ற மக்களின் வாக்குகளைக் கூட்டிப் பார்த்தால் மொத்தமாக 200 வாக்குகள்தான் வித்தியாசம் வருகிறது.
அதிமுக நூறு தொகுதிகளில் வாங்கிய ஓட்டுக்கள் 50100. திமுக நூறு தொகுதிகளில் வாங்கிய ஓட்டுக்கள் 499900. மொத்தமாக 200 வாக்குகளை மட்டுமே பெற்ற அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு ஆட்சியும் அமைத்து விடுகிறது. இது நியாயமான தேர்தலாகுமா? மக்களின் எண்ண ஓட்டத்தை இந்த முடிவு பிரதிபலிக்கிறதா? கண்டிப்பாக இல்லை.
“கவலைப் படாதீங்க! உங்களுக்கு சிரமம் கொடுக்கப்படாதுன்னுதான் நாங்களே உங்களைத் தேடி வந்துட்டோம். வாங்க வந்து ஓட்டை போடுங்க!”
இந்த தேர்தல் முறையில் உள்ள குளறுபடிகள் தற்போது நமக்கு விளங்கியிருக்கும். சரி இதற்கு மாற்று ஏற்பாடு உண்டா? அதைப் பற்றியும் சிறிது பார்ப்போம்.
ஜெர்மன் ஜனநாயக முறை:
இந்த தேர்தல் முறையில் ஆட்கள் போட்டியிட மாட்டார்கள். சங்கம் அல்லது கட்சி போன்றவைதான் போட்டியிட முடியும். ஒவ்வொரு ஆயிரம் ஓட்டுக்கும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் அந்த கட்சிக்கு என்று நிர்ணயிக்கப்படும்.
நூறு தொகுதியில் அதிமுக மேலே சொன்னது போல் 50100 வாக்குகள் பெற்றால் ஆயிரத்துக்கு ஒரு உறுப்பினர் என்ற அடிப்படையில் அதிமுகவுக்கு ஐம்பது உறுப்பினர்கள் அரசால் ஒதுக்கப்படும். உறுப்பினர்களை அந்தக் கட்சியே தேர்ந்தெடுத்துக் கொள்ளும். அதே போல் 49900 வாக்குகள் பெற்ற திமுக 49 சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்ளும். திமுகவும் தனது வேட்பாளர்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளும். இதனால் வாக்களித்த மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கிறது. இந்த முறையினால் எம்எல்ஏக்களையும் எம்பிக்களையும் விலைக்கு வாங்கும் குதிரை பேரமும் கட்டுக்குள் வரும். அடுத்து வானளாவிய அதிகாரம் தனக்கு இருப்பதாக நினைப்பவர்களுக்கும் இந்த முறை ஆப்பு வைக்கும்.
அதேபோல் சிறு சிறு லெட்டர்பேட் கட்சிகளெல்லாம் எங்களுக்கு இவ்வளவு வாக்கு வங்கி இருக்கிறது என்று மிரட்டி அதிக எம்பிக்களையும் எம்எல்ஏக்களையும் பெறும் போக்கு மாறும். ஒவ்வொரு தேர்தலிலும் அந்த கட்சி எத்தனை ஆயிரம் ஓட்டுக்கள் பெற்றுள்ளது என்பது தெளிவாகத் தெரிந்து விடும். மக்களுக்கு நல்லது செய்யவில்லை என்றால் அடுத்த தேர்தலில் மக்கள் நம்மை வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள் என்ற உண்மையான பயம் இருக்கும். இதற்கு முன் நடந்த இடைத் தேர்தலில் எந்த அளவு ஓட்டுக்கள் விலை பேசப்பட்டன என்பதை பார்த்தோம். தற்போது புதுக்கோட்டையிலும் இந்த நாடகம் அரங்கேறப் போகிறது.
நேற்று மதுரை ஆட்சியர் திரு சகாயம் எந்த காரணமும் சொல்லப்படாமல் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். கோஆப்டெக்ஸ் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டுள்ளாராம். கண்டிப்பானவர். ஊழல் செய்யாதவர். கிரானைட் குவாரிகளில் சோதனையிட்டு பல வரி ஏய்ப்புகளையும் கண்டு பிடித்து அரசுக்கு லாபம் பார்த்தவர். விடுவார்களா நம் அரசியல்வாதிகள். எங்கு கவனிக்க வேண்டுமோ அங்கு செம்மையாக கவனித்தவுடன் நேர்மையான அதிகாரி இன்று பிரச்னையில்லாத கோஆப்டெக்ஸூக்கு மாற்றப்பட்டுள்ளார். இது நான் நம் நாட்டு ஜனநாயகம். எந்த கேள்வியும் இல்லை. ஊழல் செய்ய மறுத்ததால் இன்று தடாலடியாக மாற்றப்பட்டுள்ளார். கட்டுக்கடங்காமல் அதிக எண்ணிக்கையை அரசு பெற்றதால்தான் இத்தகைய மோசடிகளை எவரும் தட்டிக் கேட்பதில்லை. விகிதாச்சார அடிப்படையில் கணக்கு பண்ணி பார்த்தோமானால் ஜெயலலிதாவுக்கு 60 அல்லது எழுபது எம்எல்ஏக்கள் கிடைப்பதே சிரமம். எல்லா அரசியல் கட்சிகளின் நிலையும் இதே லெவலில்தான் இருக்கும்.
அடுத்து பல மொழிகள் பல மதங்களைக் கொண்ட தமிழகம் இலங்கை போன்ற இடங்களுக்கும் ஜெர்மனைப் போன்ற ஜனநாயக தேர்தலே சிறப்பானதாக இருக்க முடியும். உதாரணத்துக்கு இலங்கையை எடுத்துக் கொள்வோம். தனி ஈழம் கிடைக்கும் என்பது ஒருபுறம் இருக்கட்டும். அப்படி கிடைத்து அந்த மக்கள் சுபிட்சமாக வாழ நாமும் வாழ்த்துவோம். அது அல்லாமல் சிங்களமக்கள், தமிழ் மக்கள் இந்த இரு சாராரும் தங்களின் எண்ணிக்கைக்கு தக்கவாறு பிரதிநிதிகள் அமைத்துக் கொள்ள ஜெர்மன் தேர்தல் முறை மிக உதவிகரமாக இருக்கும். இனத்தாலும் மொழியாலும் ஒன்றுபட்ட தமிழ் முஸ்லிம்கள் கலாசாரத்தால் முற்றிலுமாக இந்து சகோதரர்களிடமிருந்து வேறுபடுகிறார்கள். இவர்களும் தங்களின் கட்சிகள் பெறும் வாக்குகளின் அடிப்படையில் பிரதிநிதிகளைப் பெற்றுக் கொள்வார்கள். இந்த முறையில் எவரையும் குறை சொல்லவும் வாய்ப்பு ஏற்படாது. ஒட்டு மொத்த இலங்கை தமிழர்களும் பாதிக்கு மேல் தனி ஈழத்தை ஆதரிக்காதபோது அதிலும் பிரச்னைகள் வெடிக்க வாய்ப்பிருக்கிறது. ஒட்டு மொத்த இலங்கை தமிழ் மக்களும் தனி ஈழத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வரை இந்த ஜெர்மன் ஜனநாயக முறையை பின் பற்றினால் தற்கால பிரச்னைகள் ஓய வாய்ப்பிருக்கிறது.
எதையோ சொல்ல வந்து பதிவின் சாரம் எங்கெங்கோ சென்று விட்டது. எனது புரிதலில் இப்பொழுது உள்ள தேர்தல் முறையை நீக்கி விட்டு ஜெர்மன் மாடலில் விகிதாச்சார அடிப்படையில் ஆட்சி அமைந்தால் தற்போதய குளறுபடிகள் குறைய வாய்ப்பிருப்பதாகவே எண்ணுகிறேன். இதைப்பற்றி நமது அரசியல்வாதிகள் என்ன சொல்கிறார்கள் என்பதையும் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
வழமையாக நமது தேர்தலில் போட்டியிடும் சட்டமன்ற வேட்பாளர் ஒரு தொகுதியில் 100000 லட்சம் வாக்கு பெறுவதாக வைத்துக் கொள்வோம். இவரை எதிர்த்து போட்டியிட்ட எதிரணி வேட்பாளர் 99999 வாக்குகளே பெறுகிறார். நமது நாட்டு சட்டத்தின்படி 100000 வாக்குகள் பெற்றவர் வெற்றி பெற்று சட்டமன்றத்துக்கும் சென்று விடுகிறார். மற்றொரு வேட்பாளருக்கு 99999 வாக்குகளை கிடைத்ததால் அவர் தோல்வியுறுகிறார். 99999 பேர் போட்ட வாக்குகளுக்கு எந்த மதிப்பும் இல்லாமல் அவர்களின் எண்ணங்கள் சட்டமன்றத்தில் ஒலிக்காமலும் நீர்த்து விடுகிறது. இது ஜனநாயகமா? 99999 பேரின் எதிர் வாக்குகளைப் பெற்றவர் எவ்வாறு மக்கள் பிரதிநியாக சட்ட மன்றம் செல்ல முடியும்?
அதேபோல் ஒரு மாநிலத்தில் 100 தொகுதிகள் உள்ளதாக வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு தொகுதியிலும் ஆயிரம் வாக்காளர் என்றும் வைத்துக் கொள்வோம். இந்த அனைத்து தொகுதிகளிலும் அதிமுக 501 ஓட்டுகளும் திமுக 499 ஓட்டுகளும் பெறுவதாகக் கொள்வோம். இப்போது நூறு தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. திமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்றும் அறிவிக்கப்படுகிறது. இது நாம் பின்பற்றும் பிரிட்டனின் ஜனநாயக முறை. அதாவது அதிமுகவுக்கு 100 எம்எல்ஏக்கள் கிடைக்க திமுகவுக்கு ஒரு எம்எலஏ கூட கிடைக்கவில்லை. இரண்டு கட்சிகளும் பெற்ற மக்களின் வாக்குகளைக் கூட்டிப் பார்த்தால் மொத்தமாக 200 வாக்குகள்தான் வித்தியாசம் வருகிறது.
அதிமுக நூறு தொகுதிகளில் வாங்கிய ஓட்டுக்கள் 50100. திமுக நூறு தொகுதிகளில் வாங்கிய ஓட்டுக்கள் 499900. மொத்தமாக 200 வாக்குகளை மட்டுமே பெற்ற அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு ஆட்சியும் அமைத்து விடுகிறது. இது நியாயமான தேர்தலாகுமா? மக்களின் எண்ண ஓட்டத்தை இந்த முடிவு பிரதிபலிக்கிறதா? கண்டிப்பாக இல்லை.
“கவலைப் படாதீங்க! உங்களுக்கு சிரமம் கொடுக்கப்படாதுன்னுதான் நாங்களே உங்களைத் தேடி வந்துட்டோம். வாங்க வந்து ஓட்டை போடுங்க!”
இந்த தேர்தல் முறையில் உள்ள குளறுபடிகள் தற்போது நமக்கு விளங்கியிருக்கும். சரி இதற்கு மாற்று ஏற்பாடு உண்டா? அதைப் பற்றியும் சிறிது பார்ப்போம்.
ஜெர்மன் ஜனநாயக முறை:
இந்த தேர்தல் முறையில் ஆட்கள் போட்டியிட மாட்டார்கள். சங்கம் அல்லது கட்சி போன்றவைதான் போட்டியிட முடியும். ஒவ்வொரு ஆயிரம் ஓட்டுக்கும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் அந்த கட்சிக்கு என்று நிர்ணயிக்கப்படும்.
நூறு தொகுதியில் அதிமுக மேலே சொன்னது போல் 50100 வாக்குகள் பெற்றால் ஆயிரத்துக்கு ஒரு உறுப்பினர் என்ற அடிப்படையில் அதிமுகவுக்கு ஐம்பது உறுப்பினர்கள் அரசால் ஒதுக்கப்படும். உறுப்பினர்களை அந்தக் கட்சியே தேர்ந்தெடுத்துக் கொள்ளும். அதே போல் 49900 வாக்குகள் பெற்ற திமுக 49 சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்ளும். திமுகவும் தனது வேட்பாளர்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளும். இதனால் வாக்களித்த மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கிறது. இந்த முறையினால் எம்எல்ஏக்களையும் எம்பிக்களையும் விலைக்கு வாங்கும் குதிரை பேரமும் கட்டுக்குள் வரும். அடுத்து வானளாவிய அதிகாரம் தனக்கு இருப்பதாக நினைப்பவர்களுக்கும் இந்த முறை ஆப்பு வைக்கும்.
அதேபோல் சிறு சிறு லெட்டர்பேட் கட்சிகளெல்லாம் எங்களுக்கு இவ்வளவு வாக்கு வங்கி இருக்கிறது என்று மிரட்டி அதிக எம்பிக்களையும் எம்எல்ஏக்களையும் பெறும் போக்கு மாறும். ஒவ்வொரு தேர்தலிலும் அந்த கட்சி எத்தனை ஆயிரம் ஓட்டுக்கள் பெற்றுள்ளது என்பது தெளிவாகத் தெரிந்து விடும். மக்களுக்கு நல்லது செய்யவில்லை என்றால் அடுத்த தேர்தலில் மக்கள் நம்மை வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள் என்ற உண்மையான பயம் இருக்கும். இதற்கு முன் நடந்த இடைத் தேர்தலில் எந்த அளவு ஓட்டுக்கள் விலை பேசப்பட்டன என்பதை பார்த்தோம். தற்போது புதுக்கோட்டையிலும் இந்த நாடகம் அரங்கேறப் போகிறது.
நேற்று மதுரை ஆட்சியர் திரு சகாயம் எந்த காரணமும் சொல்லப்படாமல் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். கோஆப்டெக்ஸ் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டுள்ளாராம். கண்டிப்பானவர். ஊழல் செய்யாதவர். கிரானைட் குவாரிகளில் சோதனையிட்டு பல வரி ஏய்ப்புகளையும் கண்டு பிடித்து அரசுக்கு லாபம் பார்த்தவர். விடுவார்களா நம் அரசியல்வாதிகள். எங்கு கவனிக்க வேண்டுமோ அங்கு செம்மையாக கவனித்தவுடன் நேர்மையான அதிகாரி இன்று பிரச்னையில்லாத கோஆப்டெக்ஸூக்கு மாற்றப்பட்டுள்ளார். இது நான் நம் நாட்டு ஜனநாயகம். எந்த கேள்வியும் இல்லை. ஊழல் செய்ய மறுத்ததால் இன்று தடாலடியாக மாற்றப்பட்டுள்ளார். கட்டுக்கடங்காமல் அதிக எண்ணிக்கையை அரசு பெற்றதால்தான் இத்தகைய மோசடிகளை எவரும் தட்டிக் கேட்பதில்லை. விகிதாச்சார அடிப்படையில் கணக்கு பண்ணி பார்த்தோமானால் ஜெயலலிதாவுக்கு 60 அல்லது எழுபது எம்எல்ஏக்கள் கிடைப்பதே சிரமம். எல்லா அரசியல் கட்சிகளின் நிலையும் இதே லெவலில்தான் இருக்கும்.
அடுத்து பல மொழிகள் பல மதங்களைக் கொண்ட தமிழகம் இலங்கை போன்ற இடங்களுக்கும் ஜெர்மனைப் போன்ற ஜனநாயக தேர்தலே சிறப்பானதாக இருக்க முடியும். உதாரணத்துக்கு இலங்கையை எடுத்துக் கொள்வோம். தனி ஈழம் கிடைக்கும் என்பது ஒருபுறம் இருக்கட்டும். அப்படி கிடைத்து அந்த மக்கள் சுபிட்சமாக வாழ நாமும் வாழ்த்துவோம். அது அல்லாமல் சிங்களமக்கள், தமிழ் மக்கள் இந்த இரு சாராரும் தங்களின் எண்ணிக்கைக்கு தக்கவாறு பிரதிநிதிகள் அமைத்துக் கொள்ள ஜெர்மன் தேர்தல் முறை மிக உதவிகரமாக இருக்கும். இனத்தாலும் மொழியாலும் ஒன்றுபட்ட தமிழ் முஸ்லிம்கள் கலாசாரத்தால் முற்றிலுமாக இந்து சகோதரர்களிடமிருந்து வேறுபடுகிறார்கள். இவர்களும் தங்களின் கட்சிகள் பெறும் வாக்குகளின் அடிப்படையில் பிரதிநிதிகளைப் பெற்றுக் கொள்வார்கள். இந்த முறையில் எவரையும் குறை சொல்லவும் வாய்ப்பு ஏற்படாது. ஒட்டு மொத்த இலங்கை தமிழர்களும் பாதிக்கு மேல் தனி ஈழத்தை ஆதரிக்காதபோது அதிலும் பிரச்னைகள் வெடிக்க வாய்ப்பிருக்கிறது. ஒட்டு மொத்த இலங்கை தமிழ் மக்களும் தனி ஈழத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வரை இந்த ஜெர்மன் ஜனநாயக முறையை பின் பற்றினால் தற்கால பிரச்னைகள் ஓய வாய்ப்பிருக்கிறது.
எதையோ சொல்ல வந்து பதிவின் சாரம் எங்கெங்கோ சென்று விட்டது. எனது புரிதலில் இப்பொழுது உள்ள தேர்தல் முறையை நீக்கி விட்டு ஜெர்மன் மாடலில் விகிதாச்சார அடிப்படையில் ஆட்சி அமைந்தால் தற்போதய குளறுபடிகள் குறைய வாய்ப்பிருப்பதாகவே எண்ணுகிறேன். இதைப்பற்றி நமது அரசியல்வாதிகள் என்ன சொல்கிறார்கள் என்பதையும் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
Tuesday, May 22, 2012
'சுன்னத்'(கத்னா) பண்ணிக் கொள்ளும் ஜிம்பாப்வே எம்பிக்கள்!
'என்னய்யா....காலையிலேயே தலையில துண்டை போட்டுக்கிட்டு சோகமா திரியறே!'
'சொந்தக் கதை சோகக் கதைப்பா! இன்னைக்கு தினமலர் படிச்சியா? ஜிம்பாப்வேலே அந்த நாட்டு எம்பிக்கள் 170 பேர் சுன்னத்(கத்னா) செஞ்சுக்கப் போறாங்களாம்!'
'அதுக்கென்ன இப்போ?'
'அதுக்கென்னாவா! இத்தனை நாளும் சுன்னத் பண்றது வேஸ்ட். எய்ட்ஸை அது தடுக்காதுன்னு பிரசாரம் பண்ணிக்கிட்டிருக்கேன். இந்த நேரத்துல பாழாய்ப் போன இந்த சேதி வந்தா சோகமா இல்லாம சந்தோஷமாகவா இருக்க முடியும்?'
-----------------------------------
லண்டன்: எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு பிரசாரத்துக்கு முன்னோடியாக, ஜிம்பாப்வே நாட்டு எம்.பி.,க்கள், 170 பேர் "சுன்னத்'(கத்னா) செய்து கொள்ள முன்வந்துள்ளனர்.
ஒழுக்கக் குறைபாட்டின் காரணமாக, ஆப்ரிக்க நாடுகளில், எய்ட்ஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க, கடந்த 2010ம் ஆண்டு முதல், தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுன்னத் செய்து கொள்வதால், எய்ட்ஸ் நோய் பரவும் வாய்ப்பு குறைவு என்பதால், ஆப்ரிக்க தலைவர்கள் பலர், சுன்னத் செய்து கொண்டுள்ளனர். ஜிம்பாப்வே நாட்டில், முஸ்லிம் அல்லாத இளைஞர்களும், "சுன்னத்' செய்து கொள்கின்றனர். ஜிம்பாப்வே நாட்டு பார்லிமென்டில், கடந்த வாரம், எய்ட்ஸ் தடுப்பு குறித்த பிரசார கருத்தரங்கு நடந்தது. இதில் பேசிய எம்.பி., ஒருவர், பெண்கள் அழகாக இருப்பதால், அவர்கள் மீது ஆண்களுக்கு ஆசை வருகிறது. எனவே, பெண்களுக்கு மொட்டை அடிக்க வேண்டும். இதன் மூலம், எய்ட்ஸ் நோய் பரவுவதை தடுக்கலாம்' என்றார். இதற்கு, பல தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
எய்ட்ஸ் நோய் தடுப்பு விஷயத்தில், எம்.பி.,க்கள் முன் உதாரணமாக திகழ வேண்டும் என, தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன்படி, 170 எம்.பி.,க்கள், "சுன்னத்'(கத்னா) செய்து கொள்ள ஒப்புக் கொண்டுள்ளனர். பெண் எம்.பி.,க்கள், தங்கள் கணவருக்கு சுன்னத் செய்ய வற்புறுத்துவோம் என்று உறுதிமொழி ஏற்றுள்ளனர். முஸ்லிம் மத பெரியவர்களை கொண்டு, இந்த சடங்கு செய்வதற்கு பதில், மருத்துவர்களை கொண்டு, "சுன்னத்' செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-Dinamalar 22-05-2012
-------------------------------
Are there benefits from circumcision?
There are several:
1 Many older men, who have bladder or prostate gland problems, also develop difficulties with their foreskins due to their surgeon's handling, cleaning, and using instruments. Some of these patients will need circumcising. Afterwards it is often astonishing to find some who have never ever seen their glans (knob) exposed before!
2 Some older men develop cancer of the penis - about 1 in 1000 - fairly rare, but tragic if you or your son are in that small statistic. Infant circumcision gives almost 100% protection, and young adult circumcision also gives a large degree of protection.
3 Cancer of the cervix in women is due to the Human Papilloma Virus. It thrives under and on the foreskin from where it can be transmitted during intercourse. An article in the British Medical Journal in April 2002 suggested that at least 20% of cancer of the cervix would be avoided if all men were circumcised. Surely that alone makes it worth doing?
4 Protection against HIV and AIDS. Another British Medical Journal article in May 2000 suggested that circumcised men are 8 times less likely to contract the HIV virus. (It is very important here to say that the risk is still far too high and that condoms and safe sex must be used - this applies also to preventing cancer of the cervix in women who have several partners.)
A BBC television programme in November 2000 showed two Ugandan tribes across the valley from one another. One practised circumcision and had very little AIDS, whereas, it was common in the other tribe, who then also started circumcising. This programme showed how the infection thrived in the lining of the foreskin, making it much easier to pass on.
5 As with HIV, so some protection exists against other sexually transmitted infections. Accordingly, if a condom splits or comes off, there is some protection for the couple. However, the only safe sex is to stick to one partner or abstain.
6 Lots of men, and their partners, prefer the appearance of their penis after circumcision, It is odour-free, it feels cleaner, and they enjoy better sex. Awareness of a good body image is a very important factor in building self confidence.
7 Balanitis is an unpleasant, often recurring, inflammation of the glans. It is quite common and can be prevented by circumcision.
8 Urinary tract infections sometimes occur in babies and can be quite serious. Circumcision in infancy makes it 10 times less likely.
http://www.circinfo.com/benefits/bmc.html
Subscribe to:
Posts (Atom)




